20 எளிமையான திருக்குறள்கள் மற்றும் அதன் பொருள் | 20 Easiest Thirukkural's with Tamil Meaning

20 எளிமையான திருக்குறள் மற்றும் அதன் பொருள்  விளக்கம் | 20 Easiest Thirukkural's with Tamil Meaning 


1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

விளக்கம்: அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதலானது. அதுபோல், ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான்.

20 most easiest thirukkural for school competition 

-------------------------------------------------------------------------------------------------------------------------

2.அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்


விளக்கம்: ஒருவரிடம் இருக்கும் அடக்கமானது அவரை உயர்த்தி இறைவனடி சேர்க்கும், அடக்கம் இல்லாத மாந்தர் வாழ்வில் பல துன்பங்களை அடைவார்.


-------------------------------------------------------------------------------------------------------------------------

20 Easy Thirukkural in Tamil With Porul – திருக்குறள் 10 to 20:


3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்


விளக்கம்: மலர் போன்ற மனத்தில் நிறைந்த கடவுளை பின்பற்றுவோரின் புகழ்  உலகில் நெடுங்காலம் வரை நிலைத்து நிற்கும்.


-------------------------------------------------------------------------------------------------------------------------

4. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்


விளக்கம்: அடக்கத்துடன் இருப்பது தான் அறிவுடைமை என்று அறிந்து வாழ்ந்தால் அந்த அடக்கம் நற்பண்பு உள்ளவர்களால் அறியப்பட்டு அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.


-------------------------------------------------------------------------------------------------------------------------

20 Easy Thirukkural in Tamil – 20 எளிமையான திருக்குறள்:

5. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு


விளக்கம்: எந்த விதமான தீமைகளை செய்தவருக்கும் அந்த தீமையில் இருந்து விடுபடுவதற்கான வழி இருக்கும், ஆனால் ஒருவர் செய்த நன்மையை மறந்தவருக்கு அந்த பாவத்தில் இருந்து விடுபடுவதற்கான வழி கிடையாது


-------------------------------------------------------------------------------------------------------------------------

20 Easy Thirukkural in Tamil With Meaning:


6. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து


விளக்கம்: பணிவுடன் வாழ்வது அனைவருக்கும் நன்மையை கொடுக்கும், ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.


-------------------------------------------------------------------------------------------------------------------------

20 Easy Thirukkural in Tamil With Porul – 20 எளிமையான திருக்குறள்:


7. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து


விளக்கம்: ஒரு பிறப்பில் தன்னுடைய ஐம்புலன்களையும் அடக்கி ஆமையை போல் ஒரு மனிதன் வாழ்ந்தால், அது அவன் அடுத்து எடுக்க போகும் அனைத்து பிறவிகளுக்கும் காவலாக இருக்கும்.


-------------------------------------------------------------------------------------------------------------------------

8. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு



விளக்கம்: ஒரு மனிதன் தன் வாழ்வில் எதை காக்காவிட்டாலும் நாவையாவது அடக்கி கொள்ள வேண்டும், நாவடக்கம் இல்லையெனில் அவர் சொன்ன சொல்லே அவருக்கு துன்பமாக மாறிவிடும்.


-------------------------------------------------------------------------------------------------------------------------


9.பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது


விளக்கம்: எந்த ஒரு பயனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் செய்யும் உதவி கடலை விட பெரியதாக இருக்கும்.


-------------------------------------------------------------------------------------------------------------------------

10. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு


விளக்கம்: தீயினால் சுட்ட புண் தோலின் மேற்புறத்தில் வடுவாக இருந்தாலும் அந்த புண் ஆறி விடும், ஆனால் ஒருவன் பேசிய தீய சொற்கள் அவன் வாழும் காலம் வரை ஆறாது.


-------------------------------------------------------------------------------------------------------------------------

திருக்குறள் விளக்கத்துடன் தெரிந்துகொள்ளுங்கள் 20 Easy Thirukkural in Tamil – திருக்குறள் 20:


11. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று


விளக்கம்:  ஒருவர் செய்த நன்மையை எப்பொழுதும் மறக்க கூடாது; அவன் செய்த தீமையை உடனே மறப்பது நல்லது.


-------------------------------------------------------------------------------------------------------------------------

12. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்

புன்கண்ணீர் பூசல் தரும்


விளக்கம்:  நம் உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அதேபோல், அன்புக்குரியவரின் துன்பமான சூழ்நிலை கண்டபோது கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.


-------------------------------------------------------------------------------------------------------------------------

13. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள.


விளக்கம்: இந்த உலகில் கிடைக்க கூடிய செல்வங்களுள் அறிய செல்வமானது உயர்ந்த மனிதர்கள் தங்களின் மனதை எப்போதும் ஆளும் “அருள்’ எனப்படும் செல்வமே ஆகும். மற்றபடி அழிந்து போகும் நிலையற்ற பொருட் செல்வங்கள் இந்த உலகில் இழிவான மனிதர்களிடம் கூட இருக்கின்றன.


-------------------------------------------------------------------------------------------------------------------------

14. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு


விளக்கம்: எந்த கருத்தை யார் சொன்னாலும் அந்த கருத்தில் உள்ள உண்மையைக் காண்பது அறிவு.


-------------------------------------------------------------------------------------------------------------------------

20 Easy Thirukkural in Tamil – Easy Thirukkural in Tamil


15.கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக


விளக்கம்: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்வியில் உள்ள கருத்துக்களை ஏற்று வாழ்க்கையில்  நல் வழிகளை பின்பற்றி நடக்க வேண்டும். 


-------------------------------------------------------------------------------------------------------------------------

16. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.


விளக்கம்: மணலை தோன்ற தோன்ற தோன்றிய அளவிற்கே தண்ணீர் சுரக்கும். அதேபோல், மனிதர்கள் கல்வியை கற்க கற்க தான் அறிவு பெருகும்


-------------------------------------------------------------------------------------------------------------------------

17. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்


விளக்கம்: அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னரே அறிந்து கொள்வார்கள், அறிவில்லாதவர் அதனை அறிய இயலாதவர்களாக இருப்பார்கள்.


-------------------------------------------------------------------------------------------------------------------------

20 Easy Thirukkural in Tamil – 20 Easy Thirukkural in Tamil With Meaning


18. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ

தஞ்சல் அறிவார் தொழில்


விளக்கம்: அறிவில்லாதவர்கள் பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பார்கள், அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.


-------------------------------------------------------------------------------------------------------------------------

20 Easy Thirukkural in Tamil – Easy Thirukkural:

19. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.


விளக்கம்: எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்


-------------------------------------------------------------------------------------------------------------------------

20. அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

என்னுடைய ரேனு மிலர்


விளக்கம்: அறிவுடையவர் இடத்தில் செல்வம் இல்லையெனிலும் அவர்கள் எல்லாம் உள்ளவர்களாகவே கருதப்படுவார்கள், அறிவு இல்லாதவர்கள் இடத்தில் செல்வம் இருந்தாலும் அவர்கள் இல்லாதவராகவே கருதப்படுவார்கள்.


-------------------------------------------------------------------------------------------------------------------------




Previous Post Next Post