20 எளிமையான திருக்குறள் மற்றும் அதன் பொருள் விளக்கம் | 20 Easiest Thirukkural's with Tamil Meaning
1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
விளக்கம்: அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதலானது. அதுபோல், ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான்.
20 most easiest thirukkural for school competition
-------------------------------------------------------------------------------------------------------------------------
2.அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
விளக்கம்: ஒருவரிடம் இருக்கும் அடக்கமானது அவரை உயர்த்தி இறைவனடி சேர்க்கும், அடக்கம் இல்லாத மாந்தர் வாழ்வில் பல துன்பங்களை அடைவார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
20 Easy Thirukkural in Tamil With Porul – திருக்குறள் 10 to 20:
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
விளக்கம்: மலர் போன்ற மனத்தில் நிறைந்த கடவுளை பின்பற்றுவோரின் புகழ் உலகில் நெடுங்காலம் வரை நிலைத்து நிற்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
4. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
விளக்கம்: அடக்கத்துடன் இருப்பது தான் அறிவுடைமை என்று அறிந்து வாழ்ந்தால் அந்த அடக்கம் நற்பண்பு உள்ளவர்களால் அறியப்பட்டு அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
20 Easy Thirukkural in Tamil – 20 எளிமையான திருக்குறள்:
5. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
விளக்கம்: எந்த விதமான தீமைகளை செய்தவருக்கும் அந்த தீமையில் இருந்து விடுபடுவதற்கான வழி இருக்கும், ஆனால் ஒருவர் செய்த நன்மையை மறந்தவருக்கு அந்த பாவத்தில் இருந்து விடுபடுவதற்கான வழி கிடையாது
-------------------------------------------------------------------------------------------------------------------------
20 Easy Thirukkural in Tamil With Meaning:
6. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து
விளக்கம்: பணிவுடன் வாழ்வது அனைவருக்கும் நன்மையை கொடுக்கும், ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
20 Easy Thirukkural in Tamil With Porul – 20 எளிமையான திருக்குறள்:
7. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து
விளக்கம்: ஒரு பிறப்பில் தன்னுடைய ஐம்புலன்களையும் அடக்கி ஆமையை போல் ஒரு மனிதன் வாழ்ந்தால், அது அவன் அடுத்து எடுக்க போகும் அனைத்து பிறவிகளுக்கும் காவலாக இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
8. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
விளக்கம்: ஒரு மனிதன் தன் வாழ்வில் எதை காக்காவிட்டாலும் நாவையாவது அடக்கி கொள்ள வேண்டும், நாவடக்கம் இல்லையெனில் அவர் சொன்ன சொல்லே அவருக்கு துன்பமாக மாறிவிடும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
9.பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது
விளக்கம்: எந்த ஒரு பயனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் செய்யும் உதவி கடலை விட பெரியதாக இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
10. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
விளக்கம்: தீயினால் சுட்ட புண் தோலின் மேற்புறத்தில் வடுவாக இருந்தாலும் அந்த புண் ஆறி விடும், ஆனால் ஒருவன் பேசிய தீய சொற்கள் அவன் வாழும் காலம் வரை ஆறாது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
திருக்குறள் விளக்கத்துடன் தெரிந்துகொள்ளுங்கள் 20 Easy Thirukkural in Tamil – திருக்குறள் 20:
11. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
விளக்கம்: ஒருவர் செய்த நன்மையை எப்பொழுதும் மறக்க கூடாது; அவன் செய்த தீமையை உடனே மறப்பது நல்லது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
12. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கண்ணீர் பூசல் தரும்
விளக்கம்: நம் உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அதேபோல், அன்புக்குரியவரின் துன்பமான சூழ்நிலை கண்டபோது கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
13. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
விளக்கம்: இந்த உலகில் கிடைக்க கூடிய செல்வங்களுள் அறிய செல்வமானது உயர்ந்த மனிதர்கள் தங்களின் மனதை எப்போதும் ஆளும் “அருள்’ எனப்படும் செல்வமே ஆகும். மற்றபடி அழிந்து போகும் நிலையற்ற பொருட் செல்வங்கள் இந்த உலகில் இழிவான மனிதர்களிடம் கூட இருக்கின்றன.
-------------------------------------------------------------------------------------------------------------------------
14. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
விளக்கம்: எந்த கருத்தை யார் சொன்னாலும் அந்த கருத்தில் உள்ள உண்மையைக் காண்பது அறிவு.
-------------------------------------------------------------------------------------------------------------------------
20 Easy Thirukkural in Tamil – Easy Thirukkural in Tamil
15.கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
விளக்கம்: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்வியில் உள்ள கருத்துக்களை ஏற்று வாழ்க்கையில் நல் வழிகளை பின்பற்றி நடக்க வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
16. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
விளக்கம்: மணலை தோன்ற தோன்ற தோன்றிய அளவிற்கே தண்ணீர் சுரக்கும். அதேபோல், மனிதர்கள் கல்வியை கற்க கற்க தான் அறிவு பெருகும்
-------------------------------------------------------------------------------------------------------------------------
17. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்
விளக்கம்: அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னரே அறிந்து கொள்வார்கள், அறிவில்லாதவர் அதனை அறிய இயலாதவர்களாக இருப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
20 Easy Thirukkural in Tamil – 20 Easy Thirukkural in Tamil With Meaning
18. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்
விளக்கம்: அறிவில்லாதவர்கள் பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பார்கள், அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
20 Easy Thirukkural in Tamil – Easy Thirukkural:
19. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
விளக்கம்: எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்
-------------------------------------------------------------------------------------------------------------------------
20. அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்
விளக்கம்: அறிவுடையவர் இடத்தில் செல்வம் இல்லையெனிலும் அவர்கள் எல்லாம் உள்ளவர்களாகவே கருதப்படுவார்கள், அறிவு இல்லாதவர்கள் இடத்தில் செல்வம் இருந்தாலும் அவர்கள் இல்லாதவராகவே கருதப்படுவார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------